காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் இன்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.