ரஷியாவில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட மோடி இந்தியா வந்தடைந்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்றது. 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் ஈரான் அதிபர் மசூத் ரஜாவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில், சர்வதேச அரசியல், பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார்.