மனிதனின் மரணத்தருவாயில், மனித மூளை அதிவேகமாக செயல்படுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இறக்கும் தருவாயில், மனித மூளையில் பிரகாசமான வெளிச்சம் தோன்றுவதாகவும், அதைத்தொடர்ந்து சில மாய தோற்றங்களும், நெருக்கமானவர்களின் முகங்களும் தெரிவதாக, விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மனிதன் இறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூளை வேகமாக செயல்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனிதனின் இறப்பு நெருங்கும் போது, மூளையில் உள்ள செல்களும் இறக்கின்றன. இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், மூளை தனது செல்களை புதுப்பிக்க, தன்னால் இயன்ற வரையில் முயற்சிக்கிறது. எனவே, அந்த நேரத்தில், மூளையின் செயல்பாடுகள் வேகமாக உள்ளன. அப்போது, மூளையின் மையப் பகுதியில் ஒரு வித காம கதிர்கள் உருவாகி, அவை மூளையின் 2 பகுதிகள் இடையே பெரிய மின்சார அலைகளைப் போல உருவெடுக்கிறது. அப்போதுதான் மிகப்பெரிய வெளிச்சம் ஏற்படுகிறது. மேலும் தனது செல்களின் இறப்பை தவிர்க்க முடியாத மூளை, தனது செயல்பாடுகளை படிப்படியாக துண்டித்துக் கொள்கிறது. அப்போது, குறிப்பிட்ட அந்த மனிதரின் வாழ்க்கை நிகழ்வுகள் தோன்றி மறைகின்றன. அதன் பின்னர், மனிதனின் உயிர் பிரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இறப்பிற்கு பிறகு சராசரியாக 7 நொடிகளுக்கு இந்த காமா கதிர்கள் நீடித்து, அதன் பின்னர் மறைந்து விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.