பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், பெலாரசின் அரினா சபலென்கா ரஷியாவின் பொலினா குடர்மெட்ரோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் 4-6 என இழந்த சபலென்கா, அதனை தொடர்ந்து 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் வெல்வது இது முதல் முறை ஆகும்.