பிரிஸ்பேன் ஓபன் தொடரில் டிமித்ரோவ் தாம்சனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார். டிமித்ரோவ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் 2-1 என முன்னிலை வகிக்கும் போது தாம்சன் விலகி, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் டிமித்ரோவ், செக் வீரர் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.