மும்பை பங்குச் சந்தையில், 148 நாட்களில், 1 கோடி முதலீட்டாளர்கள் சேர்க்கை

December 13, 2022

மும்பை பங்குச் சந்தையில், 148 நாட்களில், 1 கோடி முதலீட்டாளர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரையில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், மும்பை பங்கு சந்தையில் உள்ள முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 12 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 12 கோடி முதலீட்டாளர்களில், 42% முதலீட்டாளர்கள் 30 முதல் 40 வயதினராகவும், 23% முதலீட்டாளர்கள் 20 முதல் 30 வயதினராகவும், 11% […]

மும்பை பங்குச் சந்தையில், 148 நாட்களில், 1 கோடி முதலீட்டாளர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரையில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், மும்பை பங்கு சந்தையில் உள்ள முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 12 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 12 கோடி முதலீட்டாளர்களில், 42% முதலீட்டாளர்கள் 30 முதல் 40 வயதினராகவும், 23% முதலீட்டாளர்கள் 20 முதல் 30 வயதினராகவும், 11% முதலீட்டாளர்கள் 40 முதல் 50 வயதினராகவும் உள்ளனர். மேலும், மொத்த முதலீட்டாளர்களில் 20% மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகவும், 10% குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும், 9% ராஜஸ்தான் மாநிலத்தவர்களும், 6% தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். மேலும், 8 கோடி, 9 கோடி, 10 கோடி, 11 கோடி இலக்குகளை அடைய, முறையே 107, 85, 91, 124 நாட்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu