பிஎஸ்என்எல் - டிசிஎஸ் 4ஜி ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

November 10, 2022

இந்தியாவில் 4ஜி சேவைகளை வழங்குவதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, டிசிஎஸ் நிறுவனம், 4ஜி கட்டமைப்புகளை ஏற்படுத்தி, 9 வருடங்களுக்கு அதனை பராமரித்து வரும். சுமார் 26281 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒப்புதல் கிடைத்ததன் பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனம் முதல் கட்டமாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு 10000 கோடி ரூபாயை வழங்க […]

இந்தியாவில் 4ஜி சேவைகளை வழங்குவதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, டிசிஎஸ் நிறுவனம், 4ஜி கட்டமைப்புகளை ஏற்படுத்தி, 9 வருடங்களுக்கு அதனை பராமரித்து வரும். சுமார் 26281 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஒப்புதல் கிடைத்ததன் பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனம் முதல் கட்டமாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு 10000 கோடி ரூபாயை வழங்க உள்ளது. எனவே, இந்தியாவில், வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் 4ஜி பிஎஸ்என்எல் சேவைகள் செயல்படுத்தப்படும். 4ஜி திட்டத்திற்காக, நாடெங்கிலும் சுமார் ஒரு லட்சம் செல்போன் டவர்கள் கட்டமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் மாதத்தில், 5ஜி சேவைகளை வழங்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu