மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நோக்கியா நிறுவனத்துக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்க உள்ளது.
ஆப்டிகல் நெட்வொர்க் துறையில் தேவைப்படும் கருவிகளை வழங்குவதற்கு நோக்கியா நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் இணைய உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு, இந்தியாவைச் சேர்ந்த தேஜஸ் நெட்வொர்க்ஸ், யூடிஎல் போன்ற நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது ஆத்மநிர்பார் கொள்கைக்கு எதிராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தம் நோக்கியாவுக்கு வழங்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.