பட்ஜெட் 2023 - போக்குவரத்து துறைக்கு அதிக முக்கியத்துவம் - 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு

February 1, 2023

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், போக்குவரத்து துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானப் போக்குவரத்துக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கூடுதலாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும், நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் படி, நவீன வசதிகளுடன் ஹெலிபோர்ட்டுகள், நீர் ஏரோ ட்ரோம்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உடான் திட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நடவடிக்கையாக […]

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், போக்குவரத்து துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானப் போக்குவரத்துக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கூடுதலாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும், நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் படி, நவீன வசதிகளுடன் ஹெலிபோர்ட்டுகள், நீர் ஏரோ ட்ரோம்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உடான் திட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நடவடிக்கையாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், உடான் துறையில் ஏற்படுத்தப்பட்ட பல போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் தெரிவிக்கப்பட்டன.

துறைமுகங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்களை இணைக்கும் வகையில், 100 முக்கிய போக்குவரத்து கட்டமைப்புகளை அரசு திட்டமிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், நிலக்கரி, ஸ்டீல், உணவு தானியங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எளிதாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக, 75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர, தனியார் துறையிடம் இருந்து 15000 கோடி நிதி பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu