திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5259 கோடி ரூபாய் பட்ஜெட் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கோவில் சமையலறை ஊழியர்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் வழிமுறைகள் குறித்து ஆராயவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) போன்ற இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் விஐபி, விஐபி அல்லாத விருந்தினர் மாளிகைகளின் புனரமைப்பும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.