பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ல் துவங்க உள்ள நிலையில் ஜனவரி 30-ல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரில் 1ல் தாக்கல் செய்கிறார். முன்னதாக மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஜனவரி 31ல் கூடுகின்றன. அன்றைய தினம் துவங்கும் இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6 வரையில் நடைபெறவுள்ளது.
முதல் கட்ட கூட்டத்தொடர் பழைய கட்டடத்திலேயே நடத்தப்படும். பணிகள் நிறைவடைந்து விட்டால், இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 30-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.