பிப்ரவரி 1ஆம் தேதி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2025-26 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும். பிப்ரவரி. 1ஆம் தேதி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2025-26 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறவுள்ளது. முதல் கட்டம் ஜன. 31 முதல் பிப். 13 வரை, இரண்டாம் கட்டம் மார்ச் இரண்டாம் வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை ஆகும். இதன் மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகிறார். பட்ஜெட்டில், நிதி ஒருங்கிணைப்பு, வரி சீர்திருத்தம், முதலீடு சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படலாம். பொதுச் செலவுகளை அதிகரித்தல், நிதி பற்றாக்குறையை குறைத்தல், தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளது.