தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் வந்தே பாரத் ரயில்

October 9, 2022

இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரயில்களில், 'வந்தே பாரத்' ரயில் அதி வேகமானது ஆகும். கடந்த வாரத்தில் மும்பை காந்தி நகர் இடையில் இந்த ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார். ஏற்கனவே, டெல்லி வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு வாரத்தில், மூன்றாம் முறையாக வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. முதலில், வியாழனன்று, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் அருகே, வேகமாகச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது […]

இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரயில்களில், 'வந்தே பாரத்' ரயில் அதி வேகமானது ஆகும். கடந்த வாரத்தில் மும்பை காந்தி நகர் இடையில் இந்த ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார். ஏற்கனவே, டெல்லி வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு வாரத்தில், மூன்றாம் முறையாக வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

முதலில், வியாழனன்று, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் அருகே, வேகமாகச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது எருமை கூட்டம் மோதியதால், ரயிலின் கூம்பு வடிவ முகப்பு பகுதி சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தில் 4 எருமைகள் உயிரிழந்தன. ரயில் சேதம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. நல்வாய்ப்பாக, தொழில்நுட்ப பாகங்களில் எந்த பாதிப்பும் நேரவில்லை. எனவே, ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டது. அதன் பின்னர், வெள்ளிக்கிழமை அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் பகுதி அருகில், பசு ஒன்றின் மீது ரயில் மோதியதால், விபத்து நேரிட்டது. இதிலும், பெரிய சேதம் எதுவும் நேரவில்லை என்பதால், ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்துகள் குறித்த செய்திகள், வந்தே பாரத் ரயில் சேவை மீதான மதிப்பை இழக்கச் செய்தன. இது குறித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, "கால்நடைகள் ரயில் மீது மோதுவது தவிர்க்க முடியாதது. எனினும், இது போன்ற விபத்துகளில் ரயில் பாகங்கள் சேதமடையாமல் இருக்கும் வகையில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார். இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான சனிக்கிழமையும், வந்தே பாரத் ரயில், விபத்துக்கு உள்ளாகி உள்ளது. டெல்லி வாரணாசி இடையில் இயக்கப்படும் ரயிலின் சக்கரங்கள் சுத்தாமல் சிக்கி கொண்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த ஊழியர் இதனை கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டெல்லியில் இருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் சதாப்தி ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு கவனிக்கப் படாமல் தொடர்ந்து ரயிலை 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu