புர்கினா பாசோவில், அல்கொய்தா பயங்கரவாதிகளால் 40 பேர் படுகொலை

November 30, 2023

ஆப்பிரிக்காவை சேர்ந்த புர்கினா பாசோ நாட்டில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜீபோ நகருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 42 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜே என் ஐ எம் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அமைப்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜீபோ நகரை முற்றுகையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புர்கினா பாசோ […]

ஆப்பிரிக்காவை சேர்ந்த புர்கினா பாசோ நாட்டில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜீபோ நகருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 42 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜே என் ஐ எம் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அமைப்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜீபோ நகரை முற்றுகையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புர்கினா பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் நிலப்பரப்புகள் கொண்டுவரப்பட்டு வருவதால் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை, ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றமாக அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu