ஈரானில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு பாகிஸ்தானில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியாகினர்.
ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுதலத்திற்கு பாகிஸ்தானில் இருந்து யாத்திரிகர்கள் செல்லும் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது மத்திய ஈரான் மாகாணமான யாஸ்த் பகுதியில் பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தபோது நேற்று நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 28 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பேருந்து விபத்தில் சிக்கிய போது இதில் 51 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டது முதல் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.