சென்னை ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளவாசல் பகுதியில் இருந்து இரு மாநிலங்களிலும் 60க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று காலையில் இருந்து ஆந்திராவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் 10:00 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து சீரானது. அதனைத் தொடர்ந்து தமிழக ஆந்திரா மாநிலங்களுக்கு இடையேஅரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.