இன்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து துறை சார்பில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டனர். மேலும் SETC பேருந்துகள் 100% இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.