2030ல் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் என 'புளூம்பெர்க்' நிறுவனம் பட்டியல் வெளியிட்டது.
சர்வதேச நிதியத்தின் தரவுகள் அடிப்படையில் டாலருக்கு எதிரான பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, உலக நாடுகளின் பொருளாதார நிலையை வரிசைப்படுத்தி 'புளூம்பெர்க்' நிறுவனம் பட்டியல் வெளியிட்டது.
இது குறித்து, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கூறுகையில், நாம் மூலதனச் செலவில் கவனம் செலுத்துகிறோம். வருவாய் செலவினங்களை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட ரிசர்வ் வங்கியின் பொருளாதார திட்டங்கள் மிகவும் சீரான முறையில் வளர்ச்சியடைய உதவியது என்று கூறினார்.
வரும் 2028 - 30ல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் உயர்வோம் என நாட்டின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மானி கூறியுள்ளார்.
மேலும் இந்த பட்டியல் குறித்து மூத்த பொருளாதார நிபுணர் சரண் சிங் கூறுகையில், உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உலகமே பொருளாதார நெருக்கடியில் உள்ள வேளையில் இந்திய பொருளாதாரம் மட்டும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.














