விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் ஆளும் கட்சியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக மற்றும் தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 பேர் இன்று தேர்தல் களத்தில் […]

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் ஆளும் கட்சியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக மற்றும் தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 பேர் இன்று தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பின்னர் வாக்கு பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu