இன்று காலை 7 மணி முதல் 7 மாநிலங்கள் மற்றும் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்குப் பின், உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக முதல் முறையாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது