பிரபல கல்வி நிறுவனமான பைஜூஸ், கடந்த சனிக்கிழமை, 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. நெடு நாட்களாக சர்ச்சையில் இருந்த இந்த நிறுவனத்தின் வர்த்தக முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பைஜூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2022 நிதி அறிக்கையில், அதன் தாய் நிறுவனமான திங் அண்ட் லேர்ன் இழப்பு 6% சரிந்து 24 பில்லியன் ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதன் வருவாய் இரட்டிப்பாக உயர்ந்து 35.5 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த மதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஆடிட்டர் நிறுவனமான டெலாய்ட் வெளியேறிய பிறகு, பல்வேறு நிர்வாக அதிகாரிகளின் மாறுதல்கள் நடைபெற்றது. அனைத்தையும் கடந்த பின்னர், இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.