தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் பைஜூஸ் நிறுவனத்தில், எதிர்கால லாபத்தை முன்னிறுத்தி, முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 4 பிரிவுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம், தற்போது 2 பிரிவுகளாக சுருக்கப்பட்டுள்ளது. K 10 மற்றும் Exam Prep ஆகிய 2 பிரிவுகளில் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், நிறுவனத்தின் முக்கிய தலைமை நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பிரதியுஷா அகர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். அவருடன் இணைந்து, தலைமை பொறுப்பில் பணியாற்றி வந்த ஹிமான்சு பஜாஜ் மற்றும் முகுத் தீபக் ஆகியோரும் வெளியேறி உள்ளனர். நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கை காரணமாக இவர்கள் வெளியேற்றப்படவில்லை எனவும், அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.