பிரான்சில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 10,814 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் முன்றைய தினம் பிரான்ஸ் நகரின் முக்கியமான ரயில் வழித்தடங்களில் தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பல வழி தடங்கள் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து அமைப்பு சீர்குலைந்தது. தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மார்சில் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.