கலிபோர்னியா மாகாணத்தில் 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி நேற்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவானது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடமேற்கு பகுதியில் 137 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் அதிர்வுகள் சுற்றியுள்ள பல பகுதிகளில் தென்பட்டன. இருந்தபோதிலும் உயிர் சேதமோ, பொருள் சேதுமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 4.5 என்ற ரிக்டர் அளவில் டஜன் கணக்கான பின் அதிர்வுகள் உணரப்பட்டன. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது. இந்த சம்பவத்தையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தீயணைப்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டது.