போர்நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவது போன்றதாகும். எனவே அது நடக்காது என இஸ்ரேல் பிரதமர் உறுதியாக தெரிவித்தார்.கடந்த 23 நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.. அவர் கூறியதாவது இஸ்ரேல் இந்த போரை தொடங்கவில்லை ஆனால் இந்த போரில் கண்டிப்பாக இஸ்ரேல் வெற்றி பெறும். பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக நிற்கும். செப்டம்பர் 9 பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை. அதுபோல் அக்டோபர் 7ஆம் தேதி பயங்கரமான தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹமாசு உடனான போரை நிறுத்த இஸ்ரேல் விரும்பவில்லை. இந்த போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தால் அது ஹமாசிடம் சரண் அடைவது போன்றதாகும். பயங்கரவாதத்திடம் சரண் அடைவது போல் இருக்கும். ஆனால் அது நடக்காது. இஸ்ரேல் இந்த போரை தொடங்கவும் இல்லை,விரும்பவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.