கம்போடிய பிரதமர் ஹன் சன், 38 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவருக்கு பின், அவரது மகன் ஹன் மேனட் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என தெரிவித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு, ஹன் சன் கம்போடியா பிரதமராக பதவி ஏறினார். அப்போது முதல் தொடர்ந்து பதவியில் நீடித்து வரும் அவர், கம்போடியாவின் நீண்ட கால பிரதமராக அறியப்படுகிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவில் நடைபெற்ற தேர்தலில், அவர் தலைமையிலான கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று எம்பி பதவியை பெற உள்ள தனது மகன் ஹன் மேனட் இனிமேல் தலைமை தாங்குவார் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன், தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகினாலும், கம்போடியா அரசியலில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.