இந்தியாவைத் தூண்டவில்லை, விடைகள் மட்டுமே வேண்டும் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

September 20, 2023

சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விஷயத்தில் இந்தியாவை தூண்டி விடவோ பதற்றத்தை ஏற்படுத்தவோ நினைக்கவில்லை ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை மிக தீவிரத்துடன் கையாள வேண்டும் என்று விரும்புகிறோம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு இருப்பது பற்றி நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளது என்று கனடிய அரசின் ஏஜென்சிகள் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை […]

சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விஷயத்தில் இந்தியாவை தூண்டி விடவோ பதற்றத்தை ஏற்படுத்தவோ நினைக்கவில்லை ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை மிக தீவிரத்துடன் கையாள வேண்டும் என்று விரும்புகிறோம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு இருப்பது பற்றி நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளது என்று கனடிய அரசின் ஏஜென்சிகள் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை கனடா அரசு தீவிரமாக பின்பற்றி வருகிறது. நிஜ்ஜார் கொலை விஷயத்தில் இந்தியாவை தூண்டி விடவோ பதற்றத்தை ஏற்படுத்தவோ நினைக்கவில்லை. எங்களுக்கு கேள்விக்கான விடைகள் மட்டுமே வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து இந்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவில் நடைபெற்ற வன்முறை செயலில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது. இதில் உள்நோக்கம் இருக்கிறது. இதற்கு முன்பே இதே குற்றச்சாட்டை கனடா பிரதமர் இந்திய பிரதமரிடம் தெரிவித்தார். ஆனால் அப்போதே அவை நிராகரிக்கப்பட்டன என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu