இந்தியாவில் இருந்த 41 கனடா தூதர்களை கனடா திரும்ப பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் கனடாவின் இடையே தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் அமைப்பின் பயங்கரவாதி கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு இருப்பதாக கனடா இந்தியா மீது குற்றம் சாற்றி வந்தது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கனடா தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் என 41 பேரை கனடா திரும்ப பெற்றுள்ளது. இந்த தகவலை கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் 41 தூதர்கள் விலக்கு திரும்ப பெறுவது இதுவரை இல்லாத ஒன்று. மேலும் இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை எல்லாம் கனடாவிற்கு இல்லை என்றும் தொடர்ந்து சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.