கனடாவில் நிஜ்ஜார் கொலையில் தொடர்புடைய 4வது இந்தியர் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் கரன் பிரார், கமல் பிரீத் சிங், கரண்ட் பிரீத் சிங் ஆகிய மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை கனடா போலீசார் கடந்த மூன்றாம் தேதி கைது செய்தனர். இவர்கள் எட்டுவாண்டன் பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் மீது கொலை மற்றும் சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு இந்தியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமர் பிரீத் சிங் என்ற 22 வயது நபர் ஆவார். இவர் சர்வேயின் பிரார்த்தன் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை மற்றும் சதி போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் ஏற்கனவே உரிமம் பெறாத துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது நிஜ்ஜார் கொலை வழக்கில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கொலை வழக்கில் கனடா அரசு கொலை சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு இருப்பது தெரிகிறது என்று விசாரணை அதிகாரி மந்தீப் முகர் கூறியுள்ளார்.