இமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதற்கு தொழில் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இளைஞர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரிப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, இமாச்சலப் பிரதேச அரசு தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. காங்க்ரா மாவட்டத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும், இந்த அனுமதி பொதுமக்களுக்கு பொருந்தாது என அரசினர் விளக்கம் அளித்துள்ளது.