நாடு முழுவதும் 5,000 கார்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான அனில் சவுகானை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
52 வயதான அனில் சவுகான் மீது 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 6 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ஏழு தோட்டாக்கள், ஒரு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
அசாமைச் சேர்ந்த அனில் சவுகான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 1998ம் ஆண்டு முதல் கார்களை திருடி வந்துள்ளார். இவர் மீதான குற்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இ௫ந்து சுமார் 5000 கார்களை திருடி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன் சவுகான் அசாம் அரசின் முதல் பிரிவு ஒப்பந்ததாரராக இ௫ந்துள்ளார். அப்போது நடந்த அமலாக்கத்துறை சோதனையில் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் மீண்டும் திருட்டு வேலையைத் தொடங்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.