இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு மாகாணம் ஒன்றில், கடந்த நவம்பர் 11ஆம் தேதி, ஒரே நிமிடத்தில் 7 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை திருடி சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எஸ்எக்ஸ் மாகாணத்தில் உள்ள பல்பன் தொழிற் பூங்காவில், சொகுசு கார்கள் பல, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த கார்களில், 5 கார்களை ஒரு நிமிடத்திற்குள் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்திய மதிப்பில் திருடப்பட்ட 5 சொகுசு கார்களின் மதிப்பு 7 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.