பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில், கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இந்தாண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பிற்குரிய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அப்போது அரசு தரப்பில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுத்து அரசுத் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு தமிழக கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.