வாகனங்களுக்கான ஆயில் தயாரிப்பு நிறுவனமான கேஸ்ட்ரால், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வரிக்குப் பின்னான லாபம் 193 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில், 189 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 1176 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 1091 கோடியை விட 8% அதிகமாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் (வரிக்குப் பிறகு) 8% உயர்ந்து, 815 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 758 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், கடந்த வருடம் முழுமைக்கும், நிறுவனத்தின் வருவாய் 4774 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 4192 கோடியை விட 14% உயர்வாகும். கடந்த ஆண்டு, பணவீக்க உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், லாபம் ஈட்டி உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சங்வான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.