செய்திகள் -

சுபான்ஷூ புறப்படும் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

Jun 10, 2025
மோசமான வானிலை காரணமாக ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம் ஜூன் 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம், புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்தில் இருந்து புறப்படவிருந்தது. வானிலை காரணமாக இது நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் சுபான்ஷூ சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு, ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராக சுபான்ஷூ சுக்லா […]

சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

May 28, 2025
சந்திரயான்-5 திட்டத்திற்கும் மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார். சந்திராயனை ஆராய்வதற்கான புதிய முயற்சியாக, சந்திரயான்-5 திட்டத்திற்கும் மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த மிஷன் 250 கிலோ எடையுள்ள ரோவரை சந்திரனுக்கு அனுப்பும் என்றும், இது முந்தைய சந்திரயான்-3 திட்டத்தை விட மிகுந்த முனைப்புடன் செயல்படும் என்றும் கூறினார். 2008ல் சந்திரயான்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டு, சந்திரனின் வேதியியல் மற்றும் […]

பூமிக்கு திரும்பும் தேதியை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்

May 22, 2025
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், விண்வெளியில் இருந்து மார்ச் 19ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், 10 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவர்கள் பல மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்து வந்தனர். இந்த நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் […]

ககன்யான் திட்டத்தில் பழ ஈக்கள் கொண்டு உயிரியல் சோதனை - இஸ்ரோ

May 21, 2025
இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்காக பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனைக் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்குத் தள்ளி, அவனை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் பயணத்தை திட்டமிட்டுள்ளது. இதற்காக, 2 ஆள் இல்லாத ராக்கெட் மூலம் முன்னாள் சோதனைகளை மேற்கொண்ட பிறகு, மூன்றாவது ராக்கெட் ஆள்களை ஏற்றி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. பழ ஈக்களையும் விண்வெளியில் அனுப்பி, அவை ராக்கெட் […]

எலான் மஸ்க் மற்றும் ஓபன் ஏஐ: நிறுவனத்தை வாங்கும் முயற்சி

May 21, 2025
ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் "OpenAI விற்பனைக்கு இல்லை" என தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு, எலான் மஸ்க் பிரபல சமூக ஊடக செயலியான ட்விட்டரை வாங்கி, அதனை "எக்ஸ்" என பெயர் மாற்றினார். தற்போது, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணி நிறுவனம் ஆன ஓபன் ஏஐ நிறுவனத்திற்கும் தனது கவனம் செலுத்தியுள்ளார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகள் வழங்கும் இந்த நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது, இதன் தலைமை நிர்வாக […]

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu