செய்திகள் -

இடைத்தேர்தல் பரபரப்பு 5 மாநிலங்களில் விறுவிறுப்பாக வாக்களிப்பு!

Jun 19, 2025
குஜராத், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் – பலத்த பாதுகாப்பில் வாக்களிப்பு நிர்வாக காரணங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மரணம், ராஜினாமா காரணமாக காலியாகியுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (ஜூன் 19) இடைத்தேர்தல் நடைபெற்றது. குஜராத்தின் காடி, விஸ்வதார், கேரளாவின் நீலாம்பூர், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மற்றும் மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் ஆகிய தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்களிப்பு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களிப்பில் உறுதியாக பங்கேற்றனர். விறுவிறுப்பாக […]

புவனேஸ்வரில் பிரதமர் வருகை – அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

Jun 19, 2025
புவனேஸ்வரில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மக்களவைத் தேர்தலுடன் கூடிய ஒடிசா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, மோகன் சரண் மாஜி முதல்வராக கடந்த ஆண்டு பதவி ஏற்றார். பாஜக ஆட்சியின் ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, புவனேஸ்வரில் நாளை (ஜூன் 20) முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதையொட்டி, மாநில அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சிக்குள் உள்ள அரசு […]

கேரளத்தில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – அக்டோபர் 2 முதல் அமல்!

Jun 18, 2025
மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் விலக்கு – சுற்றுச்சூழலுக்கு மையமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் மலையோர பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கேரளா ஐகோர்ட் முக்கியமான முடிவெடுத்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி முதல் தேக்கடி, அதிரப்பள்ளி, வயநாடு உள்ளிட்ட பிரபல சுற்றுலா தலங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக 5 லிட்டருக்குக் குறைவான குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை ஸ்டீல் மற்றும் காப்பர் டம்ளர்கள் பயன்படுத்த ஊக்குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கேரளா […]

வாக்காளர் அட்டை 15 நாட்களில் உங்கள் கைகளில் – தேர்தல் கமிஷனின் புதிய நடவடிக்கை!

Jun 18, 2025
தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அட்டையை விரைவாக வழங்க புதிய முறைமையை அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் வாக்காளர் பதிவு செய்த 15 நாட்களுக்குள் அட்டையை பெற்றிடும் வசதி வழங்கப்படுகிறது. இதுவரை வாக்காளர் அட்டை கிடைப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டது. இதனை மாற்ற, தற்போது தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இனிமேல், புதிதாக பதிவு செய்தவர்களுக்கும், விவரங்களை திருத்தியவர்களுக்கும் 15 நாட்களுக்குள் வாக்காளர் அட்டை தபால் மூலம் வழங்கப்படும். இதற்காக புதிய தகவல் […]

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் உயிரிழப்பு:கூடுதல் 25 லட்சம் நிவாரணம்

Jun 16, 2025
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானிநகர் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். அதோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்ததால் மேலும் 33 பேர் பலியாகி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 274ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் தலைவர் சந்திரசேகரன் அறிவித்திருந்தார். […]

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

Jun 16, 2025
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்ட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முதல் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். முதற்கட்டமாக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பெதாப் பள்ளத்தாக்கு, வெரினாக், கோகர்னாக், அச்சாபல் பூங்காக்கள் போன்ற சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் வருகைக்குத் திறக்கப்படுகின்றன. தாக்குதலுக்குப் பிறகு 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. […]
1 2 3 8

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu