மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள குண்ட்மாலா சுற்றுலா தலத்தில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில், இந்திராயணி ஆற்றின் மேல் அமைந்த பழைய பாலம் திடீரென இடிந்து விழுந்தது. வார இறுதி தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பலர் அந்த பாலத்தில் நின்றிருந்தனர். விபத்து நேரத்தில் பலர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.இந்த துயர […]
உத்திரபிரதேசத்தில் கடும் வெப்ப அலை காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிகள் ஜூன் 30 வரை மூடப்படுவதாக உத்தரபிரதேச அடிப்படை கல்வி கவுன்சில் செயலாளர் சுரேந்திர குமார் திவாரி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், பள்ளிகள் திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் […]
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்பிரஸ், கனடா மற்றும் குரோஷியா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார். சைப்பிரஸில் (ஜூன் 15–16) அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடஸின் அழைப்பில், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. கனடாவில் (ஜூன் 16–17) பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பில் நடைபெறும் G7 மாநாட்டில் மோடி ஆறாவது முறையாக பங்கேற்கிறார். குரோஷியாவில் (ஜூன் 18–19), இந்திய பிரதமராக பயணம் மேற்கொள்கிற முதல் தலைவர் […]
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய பெண்கள் வீராங்கனைகள் சாதனைகளை தொடர்கின்றனர். இந்திய அணி 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. தமிழகம் சார்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீ. ஏர் ரைபிளில் வெண்கலப் பதக்கம் வென்றார். 50 மீ. ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் பெற்றார். மனு பாக்கர் 25 மீ. பிஸ்டல் இறுதிப்போட்டியில் 6வது இடத்தில் தன்னை நிலைநிறுத்தினார். இந்த தொடரில் 78 நாடுகளைச் […]
அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்துக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் இருந்தனர். அவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 இங்கிலாந்து, 6 போர்ச்சுகல், மற்றும் ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்கள். 14 குழந்தைகளும் பயணித்தனர். இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். முதற்கட்டத்தில் 130 பேர் […]
கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு போக்குவரத்துத் துறை விதித்த தடையை ஐகோர்ட் செல்லுபடியாக உள்ளதாக உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஜூன் 16 முதல் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்படவுள்ளது. மனுதாரர்கள், இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும், விதிமுறைகளை மாற்றினால் சேவையை தொடரலாம் என்றும் வாதிட்டனர். அரசு தரப்பில், இரண்டு சக்கர வாகனங்களை வாடகை சேவைக்கு மாற்ற முடியாது என்றும், இது இந்தியாவின் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டது. நீதிமன்றம், விசாரணையை ஜூன் 24க்கு ஒத்திவைத்து, […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.