செய்திகள் -

இந்தியா-சீனா: மீண்டும் விமான சேவை மற்றும் எல்லை வர்த்தகம் தொடங்க ஒப்புதல்

Aug 25, 2025
இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. கொரோனாவினால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் மீண்டும் செயல்பட சீனா கொள்கை ரீதியாக சம்மதித்துள்ளது. மேலும், கைலாஷ் மான்சரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் சீனா […]

ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம்: 12% மற்றும் 28% வரி நீக்கம்

Aug 25, 2025
அண்மையில் நடைபெற்ற மந்திரிகளின் கூட்டத்தில், 12% மற்றும் 28% அடுக்கு வரிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டபடி, ஜிஎஸ்டி முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மந்திரிகளின் கூட்டத்தில், 12% மற்றும் 28% அடுக்கு வரிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த மாற்றத்தால் சுமார் 90% பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் […]

ஜிஎஸ்டி 2.0 – 12% மற்றும் 28% வரி நீக்கம், இனி 5% மற்றும் 18% மட்டுமே

Aug 22, 2025
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தபடி, தீபாவளி போனஸாக ஜிஎஸ்டியில் பெரும் மாற்றம் வந்துள்ளது. ஜிஎஸ்டி மந்திரிகளின் கூட்டத்தில் 12% மற்றும் 28% அடுக்கு வரி நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த மாற்றத்தால் சுமார் 90% பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி அமைப்பை எளிமையாக்கும் இந்த நடைமுறை, "ஜிஎஸ்டி 2.0" எனக் கருதப்படுகிறது.

ஜன்தன் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற தகவல் பொய் – அரசு விளக்கம்

Aug 22, 2025
மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் நிலையில், 2014-ல் தொடங்கப்பட்ட 'ஜன்தன்' திட்டத்தின் கீழ் இதுவரை 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளனர். இந்தக் கணக்குகளில் ரூ.2.67 லட்சம் கோடி இருப்பு உள்ளது. சமூக வலைதளங்களில், செப்டம்பர் 30க்கு பிறகு கே.ஒய்.சி. விவரங்களை சேர்க்காதவர்களின் 'ஜன்தன்' கணக்குகள் செயல்படாது என்ற தகவல் பரவியது. இதனால் பலர் வங்கிகளில் ஆவணங்களுடன் கூடிய படையெடுப்பை தொடங்கினர். ஆனால் […]

ஆன்லைன் சூதாட்ட கேம்கள் தடை – Dream 11, MPL அறிவிப்பு

Aug 22, 2025
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கேமிங் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா சட்டமாகும் பட்சத்தில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் கேம்கள் தடை செய்யப்படும். இதனால் கிரிக்கெட் பெட்டிங் தளங்கள் மற்றும் பல பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள், தங்கள் தளங்களில் நிஜ பணம் வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. Dream 11 நிறுவனத்தின் தாய் நிறுவனம் […]

கர்நாடகாவில் கனமழை; 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பள்ளி, கல்லூரிகள் மூடல்

Aug 18, 2025
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், மேட்டூர் அணை இந்தாண்டில் ஏற்கனவே நான்கு முறை நிரம்பியுள்ளது. சிலநாட்கள் மழை நின்ற நிலையில், கடந்த இரு நாட்களாக குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குடகு, சிக்கமகளூரு, கோலார், தட்சிணகன்னடா, உடுப்பி, ஹாசன், சிவமொக்கா ஆகிய 7 […]
1 2 3 4 7

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu