செய்திகள் -

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் – இணையத் தடை திடீர் கைது எதிரொலி

Jun 08, 2025
அரம்பாய் தெங்கோல் தலைவரின் கைது மணிப்பூரில் புதிய போராட்டத்தைத் தூண்டியுள்ளது. பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் இம்பாலில், மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவரின் கைது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் சாலைமறியல் மற்றும் டயர் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகும். நிலைமை சீராகும்படி, ஐந்து மாவட்டங்களில் ஐந்து நாட்கள் இணைய […]

NFAT 2025 நுழைவுத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு – பல்கலைக்கழகம் அறிவிப்பு

Jun 07, 2025
இயற்கை பேரிடர் மற்றும் தொழில்நுட்ப சிக்கலால், அகமதாபாத் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேரும் NFAT 2025 நுழைவுத் தேர்வு, இன்று மற்றும் நாளை நடைபெற இருந்தது. ஆனால், சில மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வாளர்களின் சிரமத்திற்கு வருத்தம் […]

ஆந்திராவில் வேலை நேரம் அதிகரிப்பு

Jun 07, 2025
ஆந்திராவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம் மூலம் வேலை நேரம் உயர்த்தப்பட்டு, சில உரிமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பெரும் விவாதத்துக்கும் எதிர்ப்புக்கும் வழிவகுத்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான NDA அரசு, தினசரி வேலை நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக உயர்த்தியுள்ளது. இனி 6 மணிநேரம் வேலை செய்த பிறகு ஒரு மணிநேர ஓய்வு வழங்கப்படும் என அமைச்சர் பார்த்தசாரதி தெரிவித்தார். கூடுதல் நேர வேலை 75 மணி நேரத்தில் இருந்து 144 மணி […]

தஹாவூர் ராணாவுக்கு நீதிமன்றக் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு

Jun 06, 2025
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவுக்கு, உடல்நிலை பரிசீலனையுடன் நீதிமன்றக் காவல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தஹாவூர் உசேன் ராணாவை, ஜூலை 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 6 அன்று காவல் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. ராணாவின் உடல்நிலை குறித்து அவருடைய வழக்கறிஞர் கவலை […]

பக்ரீத் விழாவை முன்னிட்டு டெல்லியில் விலங்கு வதை மற்றும் புகைப்படங்கள் தடை

Jun 06, 2025
விலங்கு வதை மற்றும் அதன் படங்களை பகிர்வதை தடைசெய்த டெல்லி அரசு, சமூக அமைதியை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, டெல்லி அரசு பொது இடங்களில் விலங்குகளை கொல்வதையும், அவற்றின் படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவதையும் தடை செய்துள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. பசு, கன்று, ஒட்டகம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளை சட்டவிரோதமாக வெட்ட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு […]

ஐதராபாத்தில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்படும் – டாடா-டசால்ட் ஒப்பந்தம்

Jun 05, 2025
ரபேல் போர் விமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் போவதாக முக்கிய முன்னேற்றம்! பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷனும், இந்தியாவின் டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸும் இணைந்து, ஐதராபாத்தில் ரபேல் விமானத்திற்கான உடற்பகுதிகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த தொழிற்சாலையில், பக்கவாட்டு ஓடுகள், பின்புறம், மையம் மற்றும் முன்பகுதிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த உற்பத்தி மையம், 2028-ஆம் ஆண்டு முதல் விமான பாகங்களை வழங்கும். ரபேல் விமான பாகங்கள் பிரான்ஸுக்கு […]
1 2 3 4 5 6 8

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu