முன்பதிவில் 2.5 கோடி போலி கணக்குகளை நீக்கிய IRCTC – விரைவில் இ-ஆதார் பதிவு கட்டாயம்! பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரெயில் பயணம் பெரும் சவாலாகிவிட்டது. தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை உருவாக, மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த IRCTC, 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கியது. இதனையடுத்து, தட்கல் டிக்கெட் முறையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வர, விரைவில் இ-ஆதார் அடிப்படையில் பயணிகள் பதிவு செய்யும் புதிய முறை அறிமுகமாகவுள்ளது என […]
பிரான்சுக்கு வெளியே ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்பட உள்ள முதல் நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. இந்த விமானங்களில் தற்போது முதல் முறையாக இந்தியாவில் சில முக்கிய உடல்பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. டாடா அட்வான்ஸ் சிஸ்டம் மற்றும் டசால்ட் ஏவியேஷன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முன்பகுதி, மையப்பகுதி, பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. ஐதராபாத்தில் நிறுவப்படும் தொழிற்சாலையில், 2028 […]
இனிமேல் வக்பு சொத்துக்களுக்கு 'உமீத்' போர்ட்டல் – முழுமையான மேலாண்மைக்கு மத்திய அரசின் புதிய நடவடிக்கை! மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணல்ல என உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள நிலையில், வக்பு சொத்துக்களை வெளிப்படை முறையில் பராமரிக்க ‘உமீத்’ எனும் இணையதளத்தைக் தொடங்க உள்ளது. ஜூன் 6 முதல் செயல்படும் இந்த போர்ட்டல் மூலம், இந்தியா முழுவதிலும் உள்ள வக்பு சொத்துகள் 6 மாதங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். நீளம், அகலம், புவி […]
கேரள அரசின் புதிய முயற்சி – குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை புலாவ், முட்டை பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வைரலான சிறுவன் சங்குவின் “உப்புமா வேண்டாம், பிரியாணி வேண்டும்” என்ற கோரிக்கை, கேரள அரசை சிந்திக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, பத்தனம்திட்டாவில் நடைபெற்ற மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்பு தொடக்க விழாவில் சுகாதாரத் துறை மந்திரி வீணாஜார்ஜ் புதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இனிமேல், இட்லி, சாம்பார், பால், இலையடை, கஞ்சி, பாயாசம் போன்ற பாரம்பரிய உணவுகளுடன் […]
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் கூட்டத் தொடர் – முக்கிய விவாதங்கள் எதிர்பார்ப்பு 2024-ஆம் ஆண்டின் மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெறும் பாரம்பரியமான அமர்வாகும். இதனைத் […]
கொலை வழக்கில் தேடப்பட்டவர்களும் உள்பட பலர் அரசால் வீழ்த்தப்பட்டனர் – ரூ.25 லட்சம் வெகுமதியும் அறிவிப்பு! 2025 மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிரச்சனையை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இது அந்தக் கிராமத்தை 'நக்சல் இல்லாத' பகுதியில் மாற்றி இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரணடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும் என்றும், அந்த கிராமத்தில் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.