செய்திகள் -

அசாமில் கனமழையால் கடும் வெள்ளம் – 4 லட்சம் பேர் பாதிப்பு!

Jun 02, 2025
கச்சார் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஆறுகள் நிரம்பி வழிந்ததால் சூழ்நிலை கடுமை – நிவாரணம் வழங்க அரசின் தீவிர நடவடிக்கை! அசாமில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையால் குஷியாரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 764 கிராமங்களில் 3.64 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,500 ஹெக்டேரில் மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 696 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 52 நிவாரண முகாம்களில் 10,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா, மக்கள் நதி […]

மகாராஷ்டிராவில் பரபரப்பு – ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி போராட்டம்

May 29, 2025
மகாராஷ்டிராவில் ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி போராட்டம் வெடித்துள்ளது. மகாராஷ்டிரா அரசியலில், மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. "சாவா" என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து, இந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தின. இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், காவல் துறையினர் பாதுகாப்பை அதிகரித்தனர். மோதலின்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கடைகளை நொறுக்கியதோடு, […]

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 – புதிய விதிமுறைகள்

May 29, 2025
மத்திய அரசு,குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025" எனும் புதிய மசோதாவை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு, இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்த "குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025" எனும் புதிய மசோதாவை உருவாக்கியுள்ளது. இது நான்கு பழைய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் அமையும். இந்த மசோதா சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்துவோருக்கு 2-7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1-10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத நுழைவுக்கு 5 […]

2026 பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்

May 29, 2025
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 31-ம் தேதிக்குள் https://awards.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விருதுகள் தொடர்பான விவரங்களை […]

திருவனந்தபுரத்தில் ரெயில் சேவையில் மாற்றம்!

May 29, 2025
திருவனந்தபுரம் ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா - பாரசாலா ரெயில் நிலையங்களுக்கு இடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சில ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மார்ச் 28 ஆம் தேதி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127), நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே இயக்கப்பட்டு, அங்கு நிறுத்தப்படும். அதே நாளில், மங்களூரு சென்டிரலில் இருந்து காலை […]

தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 42% இடஒதுக்கீடு

May 28, 2025
தெலுங்கானா, இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. தெலுங்கானா அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற முயற்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இதற்காக பிரதமர் மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் எடுத்துச் சொல்வேன் என்றும் […]
1 4 5 6 7 8

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu