செய்திகள் -

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சண்டை

May 28, 2025
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள குரும்ஹீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர் என்ற ரகசிய தகவலை அடிப்படையாக கொண்டு பாதுகாப்புப் படையினர் இன்று காலை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் […]

அடுத்த மாதம் இலங்கை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

May 28, 2025
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை பயணம் மேற்கொள்ள இருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் அறிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இந்தியா சென்றபோது, மோடியின் இலங்கை வருகை உறுதி செய்யப்பட்டது. இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையேயான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மேலும் 2023ல் NTPC மற்றும் இலங்கை மின்சார […]

திகார் சிறைச்சாலையை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம்

May 27, 2025
திகார் சிறைச்சாலையை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு. திகார் சிறைச்சாலை, 1958-ம் ஆண்டு நிறுவப்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது 400 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகளைக் கொண்டுள்ளது. தற்போது, முதல்வி ரேகா குப்தா டெல்லி சட்டசபையில் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது, திகார் சிறைச்சாலையை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை […]

சத்ரபதி சம்பாஜிநகரில் 144 தடை உத்தரவு

May 27, 2025
ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றும் கோரிக்கையை தொடர்ந்து சத்ரபதி சம்பாஜிநகரில் 144 தடை உத்தரவு. மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான கோரிக்கையின் காரணமாக, நாக்பூரில் ஒரு போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித போர்வை எரிக்கப்பட்டு, அது கலவரங்களை ஏற்படுத்தியது. இதனால், குல்தாபாத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறைக்கு அதிக போலீசாரின் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இந்த நாட்களில் முக்கிய […]

ஒரே நாடு ஒரு தேர்தல் மசோதாவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

May 27, 2025
ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதாவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானத்தை கூட்டுக் குழு தலைவர் பிபி சவுத்ரி மக்களவையில் சமர்ப்பித்தார். அதில் ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதா (129 வது சட்டத்திருத்தம் 2024) மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு கூடுதல் கால அவகாசம் […]

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5259 கோடி ரூபாய் பட்ஜெட் ஒப்புதல்

May 27, 2025
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5259 கோடி ரூபாய் பட்ஜெட் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கோவில் சமையலறை ஊழியர்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் வழிமுறைகள் குறித்து ஆராயவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கோடங்கல், கரீம்நகர், […]
1 5 6 7 8

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu