ஒடிசா சட்டசபையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 7 நாட்களுக்கு சஸ்பெண்ட். ஒடிசா சட்டசபை இன்று கூடியபோது, சமீபத்தில் மரணமடைந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் வைக்கப்பட்டது. பின்னர், காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் சபையில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் குழுவை அமைக்க கோரியது. மேலும் பிஜேடி எம்.எல்.ஏக்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க கோரினர். இந்தச் சந்தர்ப்பத்தில், சபாநாயகர் ஆர்ப்பாட்டத்தை […]
நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவிற்கு அபராதம் மற்றும் பாதுகாப்பு குறைப்பு. நேபாளத்தில் 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு அமைந்த பின்னர், முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா கடந்த பிப்ரவரி 19-ம் தேதி குடியரசு தினத்தன்று, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து, மன்னராட்சியை மீட்டெடுக்குமாறு கோரியிருந்தார். இதன் பின்னர், அவரது ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 110 பேர் காயமடைந்தனர். 100-க்கும் […]
டோங்கா தீவில் நேற்று மாலை 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் பசிபிக் பெருங்கடலில், டோங்கா தீவிற்கு அருகே நேற்று மாலை 5.48 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு மற்றும் 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக முதலில் அறியப்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் […]
இமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இமாச்சல் பிரதேசத்தின் குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குல்லுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்த போது இந்த விபத்து நடந்தது. இதனால் 6 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்களுடன் சேர்ந்து ஜாரியில் உள்ள மருத்துவமனையில் […]
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தின் பின்னர், ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ம் தேதி நடைபெறும். அதில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த […]
மேற்கு மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு மாலியில் ஒரு சட்டவிரோத தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 1800 பேர் இருந்ததாக கூறப்படுகின்றனர். நிலச்சரிவினால் சுரங்கம் முறிந்து விழுந்ததில், சிலர் தண்ணீரில் விழுந்தனர். இந்த விபத்தினை உறுதிப்படுத்திய அதிகாரிகள், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே இடத்தில் நிலச்சரிவில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தற்போது […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.