தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்குத் திட்டமிடல் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊதியம் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் . தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதம் 1-ந்தேதி அவரவரின் வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்குத் திட்டமிடல் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊதியம் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என அரசு தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் […]
தமிழக அரசு 10 காவல் அதிகாரிகளை மாற்றி நியமிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு 10 காவல் அதிகாரிகளை மாற்றி நியமிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது. ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தையடுத்து, நெல்லை சரக டிஐஜி மூர்த்தி மாற்றப்பட்டு, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு கூடுதல் பொறுப்பாக அந்த பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மதுரை சரக டிஐஜியாக அபினவ் குமார், ராமநாதபுரம் சரக டிஐஜியாக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா, […]
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் மே மாதத்தில் நடைபெற உள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கமைந்து, மே மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, […]
ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்க முடியாது என்ற திட்டத்தை போலீசார் அமல்படுத்த உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாமை உயிரிழப்புக்கு காரணமாகிறது. இதை தடுக்கும் வகையில், திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி, ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்க முடியாது என்ற திட்டத்தை போலீசார் அமல்படுத்த உள்ளனர். பெட்ரோல் பங்குகளில் “நோ ஹெல்மெட், […]
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண மாற்றம் செய்யப்படும். வாகன வகைக்கு ஏற்ப, சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் […]
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என். நேரு அம்மா உணவகங்கள் குறித்து விளக்கம் அளித்தார். எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை என்றும், அவற்றை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மழைக்காலத்தில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.