29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் சுற்றில் கலோயானா நல்பந்தோவாவை எதிர்கொண்டார். இந்திய வீராங்கனை 23-21, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளில் தடுமாறி வந்த […]
அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் முக்கிய ஏற்றுமதிகளுக்கு மொத்தம் 50% வரியை அமுல்படுத்தியுள்ளது; ஜவுளி, ஆடைகள், நகைகள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 25% வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து, மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 27 அதிகாலை 12:01 மணி முதல் […]
புதிய சட்டத்தால் அதிர்ச்சி – இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ரத்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய கேமிங் மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்று சட்டமாகியது. இதன் மூலம் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து Dream11, MPL போன்ற தளங்கள் தங்கள் நிஜ பண அடிப்படையிலான விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ட்ரீம்11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. இதுகுறித்து BCCI செயலாளர் […]
டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை – இன்டெல் மிகப்பெரிய பங்குதாரராக மாறியது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளின் மீது வரி விதிப்புகள் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், தனது வணிகத்தில் 10% பங்குகளை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பெரிய மானியங்களுக்கு […]
ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன்-ரஷியா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைகின்றன. இதற்கிடையில், உக்ரைன் தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில், ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்ததாகவும், உடனடியாக தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாகவும் […]
இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது போலீசார் அவரை கைது செய்தனர். 76 வயதான ரணில், 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக அவரது ஸ்டாஃப்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அதிபராக இருந்த ரணில், 6 முறை பிரதமராகவும், 2022 முதல் 2024 வரை […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.