சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்-சிராக் இணை போன்றோர் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் தோமா பாப்போவ்-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய தோமா பாப்போவ் 21-11, 21-10 என்ற நேர் செட்கணக்கில் […]
செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹொடைடா துறைமுக நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. செங்கடலில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்னரே, ஹொடைடா துறைமுகத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் […]
மேற்கத்திய தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில், வடகொரியா அரசு Hamburger, Ice cream போன்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சர்வாதிகார நாடு. இங்கு பல தசாப்தங்களாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது கிம் ஜாங் உன் நாட்டின் அதிபராக இருக்கிறார். அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையான கட்டுப்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரிய அரசு சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. […]
ஊழல் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த போராட்டங்களால், நேபாளப் பிரதமர் பதவி விலகியுள்ளார். நேபாளத்தில் நிலவி வந்த ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான தடை ஆகியவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால், கலவரங்கள் தீவிரமடைந்தன. இதில் 19 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களுக்கான தடை […]
மோசமான படகுப் பயணங்களால், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 193 பேர் உயிரிழந்தனர். முதல் விபத்து, வியாழக்கிழமை மாலை ஈக்வேட்டர் மாகாணத்தில் உள்ள காங்கோ ஆற்றில் நிகழ்ந்தது. சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்து, ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 107 […]
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிரடி வெற்றி. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்த கட்டத்தில் அதிரடியாக மீண்டு விளையாடினார். தனது வலுவான சர்வ் மற்றும் தாக்குதல்மிகு ஆட்டத்தால் இரண்டாம் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து, […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.