செய்திகள் -

ஆப்கானிஸ்தானில் பேரழிவு: 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்டோர் பலி

Sep 04, 2025
கிழக்கு மாகாணங்களில் வீடுகள் இடிந்து 6,700க்கும் மேற்பட்டவை சிதைவடைந்தன; ஆயிரக்கணக்கானோர் காயம். ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குனார் மற்றும் நாங்கர்ஹர் மாகாணங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 6,782 வீடுகள் முற்றிலும் இடிந்து சிதைந்துள்ளன. அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று […]

நேபாளில் அதிரடி முடிவு: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட 26 சமூக ஊடக செயலிகள் தடை

Sep 04, 2025
பதிவு செய்யாமல் இருந்ததால் மெட்டா, ஆல்பாபெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரபல தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாள அரசு சமூக ஊடக பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உத்தரவிட்டது. பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்தபோதும், பேஸ்புக், […]

ஆப்கானிஸ்தானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Sep 02, 2025
குனார் மாகாணத்தை மையமாக கொண்டு நடந்த பயங்கர நிலநடுக்கம்; வீடுகள் இடிந்து மண்ணில் புதைந்த நூற்றுக்கணக்கானோர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நங்கர்ஹார் மாகாணத்தின் நுலாலாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியது. மண்ணால் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால், தூக்கத்தில் இருந்த மக்கள் பெரும்பாலோர் சிக்கினர். முதலில் 800 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக […]

சூடான் டார்பர் மலைப்பகுதியில் நிலச்சரிவு – 1,000க்கும் மேற்பட்டோர் பலி

Sep 02, 2025
கனமழையால் ஏற்பட்ட பேரிடர், முழு கிராமமே மண்ணில் புதைந்தது; சூடானில் உள்நாட்டுப் போரின் நடுவே பெரும் சோகம். சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் ஒரு முழு கிராமமே மண்ணின் அடியில் புதைந்து சிதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் உள்நாட்டுப் […]

அமெரிக்காவில் மாணவர் விசா விதிகளில் கடும் கட்டுப்பாடு

Aug 29, 2025
டிரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறைகள் – இந்திய மாணவர்களுக்கு பெரும் சவால். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்ற கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் படிக்கவும் வேலை செய்யவும் விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்த புதிய விதிப்படி, சர்வதேச மாணவர் விசா (F) மற்றும் கலாச்சார பரிமாற்ற திட்ட (J) விசாவிற்கு இனி அதிகபட்சம் 4 ஆண்டுகள் […]

ஜப்பான் நகரில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு

Aug 29, 2025
குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததால், டோயோக்கே நகரில் மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதி. நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்வின் அங்கமாகிவிட்டன. ஆனால், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு உடல்நலத்திற்கும், சமூகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்நிலையில், ஜப்பானின் டோயோக்கே என்ற பாரம்பரிய நகரில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள மேயர் வெளியிட்ட உத்தரவு படி, நகர மக்கள் தினமும் அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியும். […]
1 2 3 4

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu