ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் தனிப்பட்ட யூடியூப் சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது. டிசம்பர் முதல் அமலாகும் இந்த விதி, குழந்தைகளை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற தளங்களில் ஏற்கனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வில், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை சந்தித்த குழந்தைகளில் 37% பேர் அதை யூடியூப்பில் பார்த்ததாக தெரியவந்தது. சைபர் புல்லிங், ஆபாச உள்ளடக்கம், அதிக திரை நேரம் போன்றவை குழந்தைகளின் நலனுக்கு […]
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான முடிவை கனடா மற்றும் மால்டா அறிவித்துள்ளன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, மத்திய கிழக்கில் சுதந்திரமான, பாதுகாப்பான பாலஸ்தீன் நாட்டை உருவாக்குவது நீண்ட கால இலக்காகும் எனவும், வரவிருக்கும் செப்டம்பர் 23ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். 2026ல் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் ஹமாஸ் […]
ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்ற 3-வது பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் மோதினர். முதல் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்ததால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. அதில் திவ்யா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். […]
டொராண்டோவில் நடைபெற்று வரும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் ஆற்றல்மிக்க விளையாட்டை வெளிப்படுத்தினர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் அரினா அர்செனால்டை எதிர்கொண்டார். ஆரம்பத்திலிருந்தே தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா, 6-4, 6-2 என்ற நேரடி செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைனை 6-2, 3-6, 7-5 என்ற […]
எதிரி நாடுகளின் மொழி, கலாச்சாரம் பற்றிய அறிவின்மை தேசிய பாதுகாப்பில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதால், இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்களுக்கு புதிய பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல், ஈரான் தொடர்பான தகவல் புலனாய்வில் ஏற்பட்ட சவால்கள் போன்ற காரணங்களால், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்றல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 50% வீரர்கள், அதிகாரிகள் ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி பெறுவார்கள். அரபியர்களின் […]
மக்கள் தொகை குறைவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசு குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவடைந்து, மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்தும் பெரிதும் பலனளிக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (சுமார் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி குழந்தையின் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.