மஸ்க் தனது சமூக ஊடகத்தில், டிரம்ப் குறித்து அளவு மீறி கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடையே வரி மசோதாவைத் தொடர்ந்து கடும் மோதல் ஏற்பட்டது. டிரம்ப் அரசு கொண்டுவந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' மசோதாவை மஸ்க் "முட்டாள்தனம்" என விமர்சித்ததால், அரசு ஒப்பந்தங்களை நிறுத்த டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, எப்ஸ்டீன் விவகாரத்தில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் குற்றம் சாட்டினார். […]
ஸ்பெயினுடன் நடந்த பரபரப்பான இறுதியில் பேனால்டி ஷூட்டில் வெற்றி பெற்ற போர்ச்சுகல், 2வது முறையாக நேஷன்ஸ் லீக் சாம்பியனாக மிளிர்ந்தது. ஜெர்மனியில் நடந்த நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற்றாலும், போர்ச்சுகல் வீரர்கள் சிறப்பாக மீண்டு சமன்செய்தனர். ரொனால்டோ தனது 138-வது சர்வதேச கோலையும் இன்றைய ஆட்டத்தில் அடித்தார். 90 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரம் முடிந்ததும், போட்டி 2-2 என சமமடைந்தது. பேனால்டி […]
ஆஸ்திரியா கிராஸ் நகரில் உள்ள பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சிறப்புப் படையினர் விரைந்து சென்று மாணவர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கி தாரி பின்னர் தானே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. […]
இஸ்ரேல்–ஹமாஸ் போர் காரணமாக, காசா பகுதியில் ஏராளமானோர் உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் பெறச் சென்ற பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் காரணமாக காசா பகுதியில் 54,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியங்கள் தட்டுப்பாடாக உள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் அமெரிக்க தொண்டு நிறுவனமொன்றால் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரபா பகுதியில் நிவாரண […]
78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்கும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்கியது. முனீச் நகரில் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களும் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் 36 வீரர்கள் பங்கேற்கின்றனர். இரட்டை ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், அனன்யா நாயுடு, ஆதித்யா மால்ரா, […]
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் நிலையில், டெல் அவிவ் விமான நிலையம் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ஜெர்மனியின் விமான சேவை, மீண்டும் 23ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியீடு. காசாவுக்கு ஆதரவாக ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட, இஸ்ரேல் ஏமன் மற்றும் லெபனானை நோக்கியும் போரை விரிவாக்கியுள்ளது. சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், தீ […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.