பிரதமரின் மகனின் வாழ்க்கை முறை மக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்கள் அரசியல் சுழற்சியை உருவாக்கின. மங்கோலியாவில் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் அவரது மகன் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காதலியுடன் சுற்றிய புகைப்படங்களில் விலை உயர்ந்த பொருட்கள் இடம்பெற்றிருந்ததால் மக்கள் ஆத்திரமடைந்து பிரதமரின் ராஜினாமாவை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். லவ்சன்னம்ஸ்ரைன் குற்றச்சாட்டுகளை மறுத்தபோதும், நிலைமை மோசமாகி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு […]
போலந்து நாட்டில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அதிபர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. 18ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர் ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி மற்றும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த கரோல் நவ்ரோக்கி ஆகியோர் முன்னேறினர். இதையடுத்து, இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடந்தது. மக்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் வாக்குச்சாவடிகள் முன் நீண்ட வரிசைகள் உருவாகின. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் […]
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நிர்வாக பணியாளர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றமடைந்த சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப நிறுவனங்கள் புதிய சீரமைப்பை மேற்கொண்டு வருகின்றன. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து தனது நிர்வாக ஊழியர்களை குறைத்து வருகிறது. கடந்த மாதம் 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 300 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். புதிய சந்தை நிலைமைக்கேற்ப நிறுவன வளர்ச்சி தொடர, […]
அமைதிப் பேச்சுவார்த்திக்குள் பதற்றம்; ரஷ்ய விமான தளங்கள் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. உக்ரைன் பாதுகாப்பு சேவையின் ரகசிய திட்டம், ரஷ்ய விமானப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்திக்குள், உக்ரைன் ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை நடத்தியது. பெலாயா, ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒலென்யா, மாஸ்கோ அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டன. இதில் 40க்கும் மேற்பட்ட […]
ஜப்பானின் பியூஜி மலையேற்றத்துக்கு ரூபாய் 2300 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்த பியூஜி எரிமலை, நாட்டின் மிக உயரமான மலையாகவும், சாகச வீரர்கள் மலையேற்றம் செய்யும் பிரபல இடமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இந்த அதிக மக்கள் தொகுப்பு, சுற்றுச்சூழல் மாசடைந்ததை ஏற்படுத்தியதால், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி மலையேற்றம் செய்யும் பயணிகளுக்கு சுமார் ரூ.2,300 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு, மலையேற்றக்காரர்களின் எண்ணிக்கைக்கு […]
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் இதுவரை 326 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் இதுவரை 326 பாலஸ்தீனியர்கள், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இஸ்ரேல் திடீர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ஹமாஸின் எதிர்ப்புக்கு பதிலாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.