இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, இரட்டையர் பிரிவில் நீண்ட காலமாக முன்னணி வீரராக இருந்தவர். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஏடிபி டாப் 50 தரவரிசையில் இடம் பிடித்திருந்த போபண்ணா, தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 3ஆம் சுற்றில் அவர் ஜோடி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தரவரிசையில் 20 இடங்கள் சரிந்து 53வது இடத்திற்கு சென்றுள்ளார். இதனால், அவர் தொடர்ந்து பராமரித்த வந்த உலக தரவரிசை […]
ஸ்பெயினுடன் நடந்த பரபரப்பான இறுதியில் பேனால்டி ஷூட்டில் வெற்றி பெற்ற போர்ச்சுகல், 2வது முறையாக நேஷன்ஸ் லீக் சாம்பியனாக மிளிர்ந்தது. ஜெர்மனியில் நடந்த நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற்றாலும், போர்ச்சுகல் வீரர்கள் சிறப்பாக மீண்டு சமன்செய்தனர். ரொனால்டோ தனது 138-வது சர்வதேச கோலையும் இன்றைய ஆட்டத்தில் அடித்தார். 90 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரம் முடிந்ததும், போட்டி 2-2 என சமமடைந்தது. பேனால்டி […]
டிஎன்பிஎல் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் தொடரின் 7வது லீக் ஆட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியில், ஹரி நிஷாந்த் (83 ரன்), சன்னி சந்து (45 ரன்) இணைந்து 93 ரன்கள் கூட்டாண்மை அமைத்தனர். இறுதியில் சேலம் அணி 179 ரன்கள் எடுத்தது. பின்னர் 180 ரன்கள் […]
78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்கும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்கியது. முனீச் நகரில் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களும் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் 36 வீரர்கள் பங்கேற்கின்றனர். இரட்டை ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், அனன்யா நாயுடு, ஆதித்யா மால்ரா, […]
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் கைப்பற்றும் நம்பிக்கையுடன் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி மற்றும் சாரா எர்ரானி இணைந்து விளையாடினர். செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக் மற்றும் கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியை எதிர்த்து மோதிய இத்தாலிய ஜோடி, ஆரம்பத்திலிருந்து மேன்மையாக விளையாடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தனர். இந்த வெற்றி, அவர்களின் ஒற்றுமையும் திறமையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதிய இந்த அதிரடியான ஆட்டம் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்து, பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் சாதனைப் போட்டியாக பதிவானது. முதல் இரு செட்டுகளை சின்னர் கைப்பற்ற, அதனைத் தொடர்ந்து அல்காரஸ் போராடி மீண்டு, டைபிரேக்கரில் வெற்றியை பறித்தார். 4-6, 6-7, 6-4, 7-6, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் வென்று, […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.