கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 10 நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தளங்களில் வருகை குறைந்துள்ளது. இதனால் மீன் விற்பனை, கடைவீதியில் பொருட்கள் விற்பனை, சமையல் மற்றும் மசாஜ் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். மேலும், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியாக காணப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.