காவேரி ஒழுங்காற்றுக் குழுவின் 89 ஆவது கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேச இருப்பதாக குழுவின் தலைவர் வினித் குப்தா கூறியுள்ளார்.