காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் காவிரிக்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெற்று தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று 96 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் உச்ச […]

நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் காவிரிக்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெற்று தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று 96 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 95 டிஎம்சி நிலுவை நீரை காவிரியில் இருந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் தலைமையில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மே மாதத்திற்கு தர வேண்டிய 25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க கூடாது என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu